தமிழகத்தில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாகவும், வேலைவாய்ப்பு குறித்தான முழு அறிவிப்பும் தற்போது வெளியாகி உள்ளது.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் படித்து முடித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்காக ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாதந்தோறும் வேலை வாய்ப்பு முகாம் தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அதே போல தற்போதும் ZEBRONICS நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடம் குறித்தான அறிவிப்பை தற்போது மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டு மையத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
வங்கி அதிகாரியாக மாற வேண்டுமா? – அப்போ இந்த வாய்ப்பை பயன்படுத்தி கோங்க!
அதாவது, 8 ஆம் வகுப்பு தேர்ச்சி,10,12, ITI, Diploma, B.E/B.Tech படித்தவர்கள் ZEBRONICS Industries Pvt Ltd துறையில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடத்திற்கு வயது 18 முதல் 40 வரையுள்ள ஆண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையம் (DECGC) பழைய ஆலந்தூர் சாலை, மகளிர் ஐடிஐ அருகிலுள்ள திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டியில் நாளை காலை 10.00 மணிக்கு நடைபெற இருக்கும் ஸ்பெஷல் டிரைவ் தனியார் வேலை கண்காட்சியில் கலந்துகொள்ளும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.