தமிழக டாஸ்மாக் கடைகளில் கியூ ஆர் மூலம் பில் – நிர்வாகம் திட்டம்!

0
தமிழக டாஸ்மாக் கடைகளில் கியூ ஆர் மூலம் பில் - நிர்வாகம் திட்டம்!
தமிழக டாஸ்மாக் கடைகளில் கியூ ஆர் மூலம் பில் - நிர்வாகம் திட்டம்!
தமிழக டாஸ்மாக் கடைகளில் கியூ ஆர் மூலம் பில் – நிர்வாகம் திட்டம்!

தமிழகத்தில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனை செய்வது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

டாஸ்மாக் கடைகள்

தமிழகத்தில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் கடைகளில் மதுபானம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக ஏகப்பட்ட புகார் வந்துள்ளது. இதனை தடுக்க அதிகாரிகள் கடைகளில் திடீர் சோதனை செய்து விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் இதனை தடுக்க கேரளா போல கம்ப்யூட்டர் பில் முறை கொண்டு வரலாம் என டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது.

தமிழகத்தில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – முக்கிய அறிவிப்பு!

இது குறித்து டாஸ்மாக் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழகத்தில் 5 ஆயிரம் மதுபான கடைகள் உள்ளன. அதில் அதிக விலை நிர்ணயம் செய்வது குறித்து புகார் எழுந்துள்ளது. இதுவரை 1,967 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் பிரச்சனையை சரி செய்ய முடியவில்லை. அதனால் மது கடைகளில் மதுபானத்திற்கான தொகையை முதல் கவுண்டரில் செலுத்தி 2-வது கவுண்டரில் அந்த பில்லினை கொடுத்து மதுபானம் வாங்கிக் கொள்ள ஏற்பாடு செய்யப்படும்.

மேலும் கம்ப்யூட்டர் பில்லிங் முறைகளை கொண்டு வருவதா அல்லது கியூ ஆர் குறியீடு மற்றும் கூகுள்பே போன்ற டிஜிட்டல் முறையில் தொகையை செலுத்தி மதுபானம் பெறுவதா என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!