தமிழகத்தில் மின்சார வாகன சார்ஜிங் மையங்கள்- மின்சாரத்துறை அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக மின்சார வாகன சார்ஜிங் மையங்கள் அமைக்க உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை குறித்து விளக்கமளித்துள்ளார்.
மின்சார வாரியம்:
இந்தியாவில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் அதிக லாபம் தரக்கூடிய துறைகளில் மின்சார துறையும் ஒன்றாகும். இதன் மூலம் தமிழக அரசுக்கு கோடிக்கணக்கான லாபம் கிடைத்து வருகிறது. ஆனால் மின்சாரத்துறை தற்போது நட்டத்தில் செல்வதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் விதமாக மின்சார வாரியம் பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் மாதந்தோறும் மின் கணக்கீடு மற்றும் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் போன்றவைகளை செயல்படுத்த உள்ளது.
Exams Daily Mobile App Download
நாட்டில் மக்கள் தொகை அதிகரித்து வருவதால் போக்குவரத்து வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஆனால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக மக்கள் வாகனங்களை பயன்படுத்துவது வெகுவாக குறைந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற உக்ரைன் ரஷ்யா போர் தாக்கத்தினால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து காணப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு மின்சாரம் மூலம் இயங்கும் வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது பெரும்பாலும் பயன்பாட்டுக்கு வரவில்லை என்றாலும் தற்போது அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு கூடிய விரைவில் மக்களை மின்சார வாகனத்திற்கு மாற்ற கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக Post Office ல் ஆயுள் காப்பீட்டு முகவர் காலிப்பணியிடங்கள் – ஆகஸ்ட் 18 நேர்காணல்
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மின்சார வாகன சார்ஜிங் மையங்கள் செயல்படுத்த உள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இதில் முதற்கட்டமாக 100 சார்ஜிங் மையங்கள் அமைக்க உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மேலும் கனமழை மற்றும் வெள்ள அபாயம் காரணமாக நீலகிரியில் 150, ஈரோடு, மேட்டூர், தஞ்சை, கரூர் மாவட்டங்களில் 38 என மொத்தம் 188 ட்ரான்ஸ்பார்மர்கள் மூலம் மின் விநியோகம் செய்யப்படும் என்றும் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ள பகுதிகளில் இயல்பு நிலை திரும்பியதும் மின் விநியோகம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.