கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி.. தமிழக எல்லைகளில் தீவிர சோதனை.. விவரம் உள்ளே!!
கடந்த சில நாட்களாகவே குரங்கு அம்மை நோய் தொற்று பரவி வருவதாக மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர். அதன்படி தற்போது கேரள மாநிலம் மலப்புரத்தில் 38 வயது இளைஞருக்கு குரங்கு அம்மை நோய் தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அண்மையில் அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவுக்கு திரும்பியுள்ளார். காய்ச்சலால் மருத்துவமனை சென்றபோது, வெளிநாட்டில் இருந்து திரும்பியதால் மருத்துவர்கள் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்ததில், நோய் தொற்று தெரியவந்தது. இதன் விளைவாக, தற்போது தமிழக எல்லைகளில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
























