தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்? வேகமாக பரவும் BA4 கொரோனா எதிரொலி!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் திடீரென கொரோனா பரவல் அதிகரிக்க என்ன காரணம் என்பது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம் அளித்து இருக்கிறார்.
மீண்டும் ஊரடங்கு அமல்:
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் கொரோனாவின் மூன்றாம் அலை தாக்கம் ஏற்பட்டது. கொரோனாவின் இரண்டாம் அலையில் பரவிய டெல்டா வகை வைரஸை விட மூன்றாம் அலையில் பரவிய ஓமிக்ரான் வைரஸ் பாதிப்புகள் குறைவாகவே இருந்தது. மேலும் மூச்சுத் திணறல், ஆக்சிஜன் தேவை போன்ற சூழல் ஏற்படவில்லை. அதனால் சிறிது நாட்களுக்கு மட்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அதன் பின் ஊரடங்கு நீக்கிக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் வேகமெடுக்கத் தொடங்கி இருக்கிறது.
Exams Daily Mobile App Download
ஒரே நாளில் 2000க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு வேகமாகப் பரவும் BA4, BA5 வகை வைரஸ் பாதிப்பு தான் காரணம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் பாதிப்பும் குறைவாக இருந்தாலும் பரவும் வேகம் அதிகமாக இருக்கிறது. அதனால் தான் நாளுக்கு தான் கொரோனா பரவி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா பாதிப்பால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.
தமிழகத்தில் 3 வது தவணையாக பூஸ்டர் தடுப்பூசி போட அறிவுறுத்தல் – அமைச்சர் அறிக்கை!
ஆனால் பண்டிகை காலம் வர இருப்பதால் அதை நம்பி தான் மக்களின் பொருளாதாரம் இருக்கிறது. அதனால் இந்த நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் வைரஸ் பாதிப்பு அதிகரித்தாலும், 40 சதவீதத்திற்கும் அதிகமாக மருத்துவ படுக்கை நிரம்பினாலோ, பாசிட்டிவ் விகிதம் 10 சதவீதத்திற்கு அதிகமாக இருந்தால் மட்டுமே கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது பாசிட்டிவ் விகிதம் 7%ஆக மட்டுமே இருக்கிறது. அதனால் கட்டுப்பாடுகள் கடுமையாக தேவை இல்லை என அவர் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.