தமிழகத்தில் 3 வது தவணையாக பூஸ்டர் தடுப்பூசி போட அறிவுறுத்தல் – அமைச்சர் அறிக்கை!

0
தமிழகத்தில் 3 வது தவணையாக பூஸ்டர் தடுப்பூசி போட அறிவுறுத்தல் - அமைச்சர் அறிக்கை!
தமிழகத்தில் 3 வது தவணையாக பூஸ்டர் தடுப்பூசி போட அறிவுறுத்தல் - அமைச்சர் அறிக்கை!
தமிழகத்தில் 3 வது தவணையாக பூஸ்டர் தடுப்பூசி போட அறிவுறுத்தல் – அமைச்சர் அறிக்கை!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் வேளையில் இரண்டாவது தவணை தடுப்பூசியை செலுத்திக்கொண்ட மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துள்ளதால் 3 வது தவணையாக பூஸ்டர் தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

பூஸ்டர் தடுப்பூசி:

தமிழகத்தில் தற்போது கொரோனா நான்காம் அலையின் பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனாவினால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் கூட தொற்றின் பரவல் மிக அதிகமாக இருந்து வருகிறது. மேலும், தமிழகத்தில் பெரும்பாலான பொதுமக்கள் கொரோனா 2 தவணைத் தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டுள்ளனர். ஆனாலும், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகளுக்கு மேல் ஆகியதால் பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்துள்ளது. இதனால் கொரோனா தொற்று எளிமையாக பரவ அதிக வாய்ப்புள்ளது.

Exams Daily Mobile App Download

இதனால், தமிழகத்தில் கொரோனா பரவல் வெகு வேகமாக பரவுவதை கருத்தில் கொண்டு தகுதியுள்ளவர்கள் கண்டிப்பாக மூன்றாவது தவணையாக பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தி கொள்ளும்படி சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், அனைவருமே தற்போது முகக்கவசம் அணிய வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். இதனால், கண்டிப்பாக பொது இடங்களுக்கு செல்ல நேரிடும் சமயங்களில் முகக் கவசம் கட்டாயமாக அணிந்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு! முக்கிய அறிவிப்பு!

மேலும், 10க்கும் மேற்பட்ட பொது மக்கள் ஒரே இடத்தில் கூட வேண்டிய நிகழ்ச்சிகளில் கட்டாயமாக அனைவரும் முகக் கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் அரசு நிகழ்ச்சிகள், பள்ளிக்கூடங்கள், பொது கோவில்கள் போன்ற மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கட்டாயமாக மாஸ்க் அணிந்து செல்லும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகம் முழுக்க வரும் ஜூலை 10 ஆம் தேதியன்று கொரோனா சிறப்பு முகாம் அமைக்கவுள்ளதாகவும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இந்த முகாமில் கலந்துகொண்டு அனைத்து பொதுமக்களும் மீதமுள்ள கொரோனா தடுப்பூசியை, அதாவது இரண்டாவது தவணையை செலுத்தி கொள்ளாதவர்கள் செலுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!