சென்னை – ராஜஸ்தான் இடையிலான ஐபிஎல் போட்டி – இன்று நள்ளிரவு வரை மெட்ரோ ரயில் இயக்கம்! நிர்வாகம் அறிவிப்பு!

0
சென்னை - ராஜஸ்தான் இடையிலான ஐபிஎல் போட்டி - இன்று நள்ளிரவு வரை மெட்ரோ ரயில் இயக்கம்! நிர்வாகம் அறிவிப்பு!
சென்னை - ராஜஸ்தான் இடையிலான ஐபிஎல் போட்டி - இன்று நள்ளிரவு வரை மெட்ரோ ரயில் இயக்கம்! நிர்வாகம் அறிவிப்பு!
சென்னை – ராஜஸ்தான் இடையிலான ஐபிஎல் போட்டி – இன்று நள்ளிரவு வரை மெட்ரோ ரயில் இயக்கம்! நிர்வாகம் அறிவிப்பு!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை – ராஜஸ்தான் இடையிலான ஐபிஎல் போட்டி நடைபெறுவதையொட்டி சென்னை மெட்ரோ ரயில் இன்று நள்ளிரவு வரை இயக்கப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மெட்ரோ ரயில்

சென்னையில் 17-வது ஐபிஎல் லீக் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதில், தோனி தலைமையிலான சென்னை அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மொத இருக்கின்றனர். சென்னை அணி, லக்னோ மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு எதிரானப் போட்டிகளில் வெற்றி பெற்று ராஜஸ்தான் அணி உடனும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஹைதராபாத் மற்றும் டெல்லி அணிகளுடன் மோதி வெற்றி பெற்றுள்ளது.

தமிழக அஞ்சல் துறை GDS தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!

இந்நிலையில் இந்த இரண்டு அணிகளும் மூன்றாவது வெற்றியை பார்க்க காத்துக் கொண்டிருக்கிறது. சென்னை அணி தனது சொந்த மண்ணில் விளையாடுவதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதனால் சென்னை- ராஜஸ்தான் இடையே நடைபெற இருக்கும் போட்டியை காண வரும் ரசிகர்களின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில், இன்று நள்ளிரவு வரை இயக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த ரயில் அரசினர் தோட்ட ரயில் நிலையத்தில் இருந்து நள்ளிரவு 1 மணிக்கு கடைசி ரயில் புறப்படும் எனவும், 5-15 நிமிடங்கள் இடைவெளியில் இந்த ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!