சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.40 சரிவு – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
கடந்த சில நாட்களாகவே சென்னையில் ஆபரண தங்கத்தின் தொடர்ந்து அதிகரித்து வந்த வேளையில் தற்போது சவரனுக்கு ரூ.40 என்ற அளவிற்கு குறைந்துள்ளது. தங்கத்தின் விலை குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தங்கத்தின் விலை:
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக கூடுவதும் குறைவதுமாய் இருந்து வருகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்தாலும் கூட பொதுமக்கள் நகை வாங்குவதில் தான் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அதாவது, தங்கத்தில் முதலீடு செய்தால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கூட ஆபரணத் தங்கத்தின் மதிப்பு உயர்ந்து கொண்டே தான் இருக்கும். இதனால் தங்கத்தில் முதலீடு செய்வது தான் பாதுகாப்பான திட்டமாகாகவும், புத்திசாலித்தனமான திட்டமாகவும் தாய்மார்கள் எண்ணுகின்றனர். பெரும்பாலும் ஒரு குடும்பத்திற்கு வரும் வருமானத்தில் பாதியை தங்கத்திலேயே முதலீடு செய்து விடுகின்றனர்.
Exams Daily Mobile App Download
ரஷ்ய மற்றும் உக்ரைன் போராலும் பங்குச்சந்தை நிலவரம் அவ்வபோது சரிவடைந்து கொண்டிருப்பதால் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. மேலும், வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை ஏற்றுமதி இறக்குமதி செய்வதாலும் தங்கத்தின் விலையில் சில மாற்றங்கள் இருந்து வருகிறது. நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 37,464 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 4,683 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதேபோல சென்னையில் நேற்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 65.20 ரூபாய்க்கு விற்பனையானது.
Reliance நிறுவனத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு – 10வது முடித்தவர்களுக்கு மாதம் ரூ.20,000 ஊதியம்..!
தற்போது நேற்றைய ஆபரண தங்கத்தின் விலையில் இருந்து தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. அதாவது, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.37,424 -க்கு விற்பனையாகி வருகிறது. மேலும், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5 குறைந்து ரூ.4,678க்கு விற்பனையாகி வருகிறது. இதேபோல ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.10 காசுகள் குறைந்து ரூ.65.10-க்கு விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், இன்று மாலை தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.