தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!
தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக கடந்த 2 மாதங்களாகவே லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இன்றைய வானிலை அறிக்கை தகவலின் படி அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கனமழை அறிவிப்பு
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கேரளா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய பகுதிகளில் கனமழை இடைவிடாது பெய்து வருகிறது. அதனால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பெய்த கன மழையால் நீர் நிலைகள் நிரம்பி வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் சாலைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்திலும் மழை பெய்து வருகிறது.
தற்போது மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதனை தொடர்ந்து இந்த மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் முழுவதும் இன்று முதல் ஆகஸ்ட் 22ம் தேதி வரை இடியுடன் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் ஆகஸ்ட் 23, 24ம் தேதிகளில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 5ம் வகுப்பு படித்தவர்களுக்கான கிராம உதவியாளர் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
Exams Daily Mobile App Download
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் நகரின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூரில் 6 செ.மீ, காஞ்சிபுரம் செங்கல்பட்டு, தாம்பரம், புதுக்கோட்டை மாவட்டம் பெருங்கலூர் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும் தெற்கு வங்கக்கடல் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரி கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் அதனால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்