தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஓய்வு பெற்ற பின் மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் ஊழியர்கள் இறந்த பிறகு அவர்களின் குடும்பத்தாரர்கள் ஓய்வூதியம் பெறவும் சட்டம் வழிவகை செய்கிறது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
ஓய்வூதியம்:
தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த தனுஷ்கோடி என்பவர் ஆரணியில் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியராக பணியாற்றினார். இவர் மரணமடைந்த பிறகு அவரது இரண்டாவது மனைவி பென்ஷன் கேட்டு விண்ணப்பம் செய்தார். ஆனால், இந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இவர் தனது முதல் மனைவி உயிருடன் இருக்கும்போதே அவரது சகோதரியை 2 வதாக திருமணம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2010 ல் தனுஷ்கோடி மரணமடைந்ததை அடுத்து குடும்ப பென்ஷன் பெறுவதில் சிக்கல் எழுந்தது. பென்ஷன் பெறும் நபர்கள் இறந்தால் சட்டத்தின் படி அவரின் துணைவிக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.
Exams Daily Mobile App Download
அதன் அடிப்படையில் அவரது இரண்டாவது மனைவி பென்ஷன் வேண்டி விண்ணப்பித்திருந்தார். இதனை அக்கவுண்டன்ட் ஜெனரல் நிராகரித்ததை அடுத்து 2வது மனைவி சாந்தி தனக்கு பென்ஷன் வழங்க உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணையில் 2வது மனைவிக்கு பென்ஷன் வழங்க மறுக்கப்பட்டது சரி தான் என்று நீதிபதி எஸ்எம் சுப்ரமணியம் கூறியுள்ளார். மேலும் முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது பென்சன்தாரர் 1975ம் ஆண்டு இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.
Infosys நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு அறிவிப்பு? தகவல் வெளியீடு
அரசு ஊழியராக இருந்து கொண்டு இத்தகைய செயலில் ஈடுபடுவது தவறானது. சட்டப்படி இந்த 2வது திருமணம் தவறானது. அதனால் பென்ஷன் வழங்க சட்டத்தில் இடமில்லை. மேலும் பென்ஷன் விதிகளின்படி 2வது மனைவிக்கு குடும்ப பென்ஷன் மறுத்ததால் தவறு எதுவும் இல்லை என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். மேலும் தனுஷ் கோடி என்பவரின் 2வது மனைவி சாந்தியின் பென்ஷன் கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.