Infosys நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு அறிவிப்பு? தகவல் வெளியீடு!
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களை பணியமர்த்திக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், சம்பளத்தையும் அதிகரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Infosys நிறுவனம்:
நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம் தொடர்ந்து பணியாட்களை பணியமர்த்தி கொண்டிருக்கிறது. இந்த ஆண்டின் இறுதியிலும் எக்கச்சக்க பணியாளர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. இதனால், இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் சம்பளத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. கடந்த ஜூன் 2022 காலாண்டின் இறுதியில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 3,35,186 ஊழியர்கள் பணியாற்றி வந்தனர்.
Exams Daily Mobile App Download
இதனையடுத்து, 2022-23 நிதியாண்டில் 21,171 ஊழியர்கள் புதிதாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். கடந்த 12 மாதத்தில் மட்டுமே 28.4 சதவீத ஊழியர்கள் புதிதாக பணியில் சேர்ந்துள்ளனர். அதாவது, இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் திறன்களுக்கான முதலீடுகள் மூலமாக ஊழியர்களை பணியமர்த்தல் மற்றும் போட்டி இழப்பீடு திருத்தங்கள் மூலமாக வலுவான வளர்ச்சி வேகத்தை தூண்டி வருவதாக இன்ஃபோசிஸ் நிறுவன தலைமை நிதி அதிகாரி நிலஞ்சன் ராய் கூறியுள்ளார்.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் கனமழை – வானிலை ஆய்வு மையம் தகவல்
இன்ஃபோசிஸ் நிறுவனங்களை போலவே நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), எச்சிஎல் டெக் மற்றும் விப்ரோ உள்ளிட்ட முக்கிய ஐடி நிறுவனங்களும் ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தலாம் என திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த கொரோனா காலகட்டத்திற்கு பிறகு தான் ஐடி நிறுவனங்கள் நல்ல வளர்ச்சியை எட்டியுள்ளது. இதனால், தொடர்ந்து ஊழியர்களை பணியமர்த்தும் வேளையில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.