தமிழகத்தில் அனைத்து சனிக்கிழமையும் பள்ளிகள் – அன்பில் மகேஷ் அறிவிப்பு!
தமிழகத்தில் காலம் தாழ்த்தி பள்ளிகள் திறக்கப்பட இருக்கும் நிலையில், அனைத்து சனிக்கிழமையும் வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் அறிவித்துள்ளார்.
சிறப்பு வகுப்புகள்:
தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் ஒன்றாம் தேதியும், 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருந்தது. ஆனால் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் ஜூன் ஏழாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், தமிழகத்தில் வெப்ப அலையின் தாக்கம் அதிகமாக இருந்து வந்ததால் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையின் அடிப்படையில் ஜூன் 12-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் அஞ்சலக சேமிப்பு திட்டம் – பொதுமக்கள் கவனத்திற்கு! முழு விவரம்!
இன்னும் பள்ளிகள் திறப்பதற்கு ஓரிரு நாட்களே இருக்கும் நிலையில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, பள்ளி மாணவர்களுக்கு காலம் தாழ்த்தி பள்ளிகள் திறக்கப்பட இருக்கும் நிலையில் ஒவ்வொரு பாடத்திற்கும் நான்கு மணிநேரம் பற்றாக்குறை ஏற்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதனால், இதனை ஈடு கட்டும் விதமாக பள்ளி மாணவர்களுக்கு பாடங்களை விரைவாக முடிப்பதற்கு அனைத்து சனிக்கிழமைகளிலும் வகுப்புகளை நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.