குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் அஞ்சலக சேமிப்பு திட்டம் – பொதுமக்கள் கவனத்திற்கு! முழு விவரம்!
இந்திய தபால் துறையில் பல நல்ல சேமிப்பு திட்டங்கள் இருக்கும் நிலையில் குறைந்த முதலீட்டில் நிறைய லாபம் பார்க்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
சேமிப்பு திட்டம்
மத்திய அரசு பல நல்ல அஞ்சலக திட்டங்கள் மூலம் மக்களுக்கு நன்மை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது புதிதாக சிறு சேமிப்பு திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த சிறு சேமிப்பு திட்டம் பாதுகாப்பானது மட்டுமல்லாமல் மக்களுக்கு நன்மை அளிக்கக்கூடியது. அதனால் மக்கள் பலர் சிறுசேமிப்பு திட்டங்களில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அழகத்தில் ரூ. 50 முதலீடு செய்தால் நீங்கள் உங்களது ஓய்வு காலத்தில் ரூ. 35 லட்சம் வரை சேமிக்க புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் பெயர் போஸ்ட் ஆபீஸ் கிராம் சுரக்ஷா யோஜனா திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் தினமும் ரூ. 50 முதல் மாதம் ரூ. 1500 ரூபாய் வரை முதலீடு செய்து முதிர்வு காலத்தில் ரூபாய் 35 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 19 வயது நிரம்பிய அனைவரும் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Twitter Page for More Latest News Updates
இந்த காப்பீட்டுத் தொகை திட்டத்தின் மூலமாக குறைந்தபட்சமாக ரூபாய் 10,000 முதல் அதிகபட்சமாக 10 லட்சம் வரைக்கும் சேமிக்கலாம், மேலும் இந்த திட்டத்தில் சேர்ந்த பின் கடன் வசதி கிடைக்கும் என்பதால் மக்களுக்கு சிறந்த திட்டமாக இருக்கிறது.