
கால்நடை மருத்துவ படிப்புக்கு ஜூன் 12 முதல் விண்ணப்பிக்கலாம் – அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு!
தமிழகத்தில் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மாணவர்கள் ஜூன் 12ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல், பொறியியல் ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்பபதிவுகள் முடிவடைந்துள்ளது. தற்போது கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கால்நடை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேர விரும்புபவர்கள் ஜூன் 12ம் தேதி முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து நாய்கள் இறக்குமதி செய்ய தடை நீக்கம் – நீதிமன்றம் உத்தரவு!
இப்படிப்பிற்கு மாணவர் சேர்க்கை 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும் மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு அளிக்கப்படும்.
Follow our Instagram for more Latest Updates
தற்போது கால்நடை மருத்துவ படிப்பில் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய இடங்களில் உள்ள கல்லூரிகளில் மொத்தமாக 660 இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு 63 இடங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.