வெளிநாடுகளில் இருந்து நாய்கள் இறக்குமதி செய்ய தடை நீக்கம் – நீதிமன்றம் உத்தரவு!

0
வெளிநாடுகளில் இருந்து நாய்கள் இறக்குமதி செய்ய தடை நீக்கம் - நீதிமன்றம் உத்தரவு!
வெளிநாடுகளில் இருந்து நாய்கள் இறக்குமதி செய்ய தடை நீக்கம் - நீதிமன்றம் உத்தரவு!
வெளிநாடுகளில் இருந்து நாய்கள் இறக்குமதி செய்ய தடை நீக்கம் – நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் வெளிநாடுகளில் இருந்து வர்த்தக பயன்பாட்டிற்கு நாய்கள் இறக்குமதி செய்ய தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த அறிவிப்பை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

நீதிமன்றம் உத்தரவு:

தமிழகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு மத்திய அரசின் அந்நிய வர்த்தக துறை தலைமை இயக்குநர் உள்நாட்டு நாய் இனங்களை பாதுகாக்க வெளிநாடுகளில் இருந்து வர்த்தக பயன்பாட்டிற்கு நாய்களை இறக்குமதி செய்ய தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கென்னல் கிளப், மெட்ராஸ் கெனைன் கிளப் ஆகியவை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இந்நிலையில் இந்த வழக்கில் அதிகாரபூர்வ ஆய்வோ அல்லது புள்ளி விவரங்களோ இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தது. அதில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நாய்களை தனிமைப்படுத்தி பரிசோதனை செய்யப்பட்டு பின் தான் அனுமதிக்கப்படுவதால் அதனால் எந்த பாதிப்பும் ஏற்பாடாது என தெரிவித்தார்.

தமிழக போக்குவரத்து துறையில் காலிப்பணியிடங்கள் – அமைச்சர் சொன்ன அப்டேட்!

நாய்கள் இனப்பெருக்கம் தொடர்பாக தமிழ் விலங்குகள் நல வாரியம், தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது. அதனால் நாய்கள் இறக்குமதி செய்யப்படுவதை முறைப்படுத்தலாம் எனக்கூறி மத்திய அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!