தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் – இன்று முதல் துவக்கம்!
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது இந்த நலத்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க ஏதுவாக பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக மேலும் கூடுதலான தகவல்களை பார்ப்போம்.
மாற்றுத்திறனாளிகள் கவனத்திற்கு
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகள் இந்த நலத்திட்டத்தில் பயன்பெற இந்த நலத்திட்டங்கள் குறித்து பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அத்துடன் இந்த நலத்திட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள், கடன் உதவி, திறன் பயிற்சி, பசுமை வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பம் வழங்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
இது தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, கரூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டத்தில் பயன்பெற சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அதன்படி இன்று குளித்தலை தாலுகா மற்றும் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொண்டு நலத்திட்டத்தில் பயன்பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.
ஆதார் & வாக்காளர் அட்டை இணைப்பு பற்றிய தகவல் – தலைமை தேர்தல் ஆணையாளர்
இதே போல், நாளை நெய்தலுார் பஞ்சாயத்து அலுவலகம் பனையூர் மற்றும் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 4) இனுங்கூர் பஞ்சாயத்து அலுவலகத்திலும் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 5ம் தேதி தோகைமலை ரஜினி திருமண மகாலிலும், ஆகஸ்ட் 6ம் தேதி ஆர்.டி.மலை சமுதாய கூடத்திலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் கலந்து கொள்ள தங்களின் ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 4 உள்ளிட்டவற்றை கட்டாயமாக கொண்டு வர வேண்டும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு மாற்றுத்திறனாளிகள் பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.