ரேஷன் கடைகளில் இலவசமாக 3 கேஸ் சிலிண்டர்? மாநில அரசு அசத்தல் அறிவிப்பு!

0
ரேஷன் கடைகளில் இலவசமாக 3 கேஸ் சிலிண்டர்? மாநில அரசு அசத்தல் அறிவிப்பு!
ரேஷன் கடைகளில் இலவசமாக 3 கேஸ் சிலிண்டர்? மாநில அரசு அசத்தல் அறிவிப்பு!
ரேஷன் கடைகளில் இலவசமாக 3 கேஸ் சிலிண்டர்? மாநில அரசு அசத்தல் அறிவிப்பு!

இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மாதந்தோறும் சிலிண்டர் வாங்குவதில் மக்கள் பொருளாதார ரீதியாக பல்வேறு சிக்கலை எதிர்கொள்கின்றனர். இதனை சமாளிக்க உத்தரகாண்ட் அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இலவச சிலிண்டர்:

இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமையல் எரிவாயு அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருப்பதால் இதன் விலை அதிகரிப்பு அனைத்து தரப்பு மக்களையும் பாதிப்புக்குள்ளாகிறது. சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு தகுந்தபடி எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாற்றி வருகின்றன. இந்த நிலையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை 1000 ரூபாயை கடந்துள்ளது. இந்த நிலையில் சிலிண்டருக்கான மானியத் தொகையும் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவது இல்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

கோபி மீது புகார் கொடுக்கும் பாக்கியா, கைது செய்யும் போலீசார் – அதிரடி திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி!

தற்போதைய காலகட்டத்தில் வேலையை எளிமையாக்க அனைவருமே கேஸ் சிலிண்டர் அடுப்பு தான் பயன்படுத்துகின்றனர். இந்த நேரத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மேலும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டு வருகிறது. விலை உயர்வு காரணமாக நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநில அரசு ரேஷன் அட்டை வைத்திருப்போருக்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்க முடிவு செய்துள்ளது. கடந்த மே மாதம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு மூன்று கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று உத்தரகாண்ட் அரசு அறிவித்தது.

Exams Daily Mobile App Download

 

அதன்படி தற்போது இந்த இலவச சிலிண்டர் பெறுவதற்கான தகுதிகளை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதாவது இலவச சிலிண்டர் பெற நினைப்பவர்கள் அந்தியோதயா ரேஷன் அட்டைதாரராக இருக்க வேண்டும். அந்தியோதயா ரேஷன் கார்டு சிலிண்டர் அட்டையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இதன் மூலம் சுமார் 1,84,142 அந்தியோதயா ரேஷன் அட்டைதாரர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது. இத்திட்டத்தை செயல்படுத்த அரசுக்கு ஆண்டுக்கு 55 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அந்தியோதயா ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே ஆண்டுக்கு மூன்று கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!