கோபி மீது புகார் கொடுக்கும் பாக்கியா, கைது செய்யும் போலீசார் – அதிரடி திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி!
பாக்கியாவை ஏமாற்றி விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கி ராதிகாவை திருமணம் செய்ய நினைத்ததற்காக கோபியின் மீது பாக்கியா புகார் கொடுத்து கோபியை போலீசார் கைது செய்வது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபியை பற்றிய அனைத்து உண்மைகளும் குடும்பத்தினர்கள் அனைவருக்கும் தெரிந்துவிட்டது. ஆனாலும், கோபி உண்மையை ஒப்புக்கொள்ளவில்லை எப்படியாவது பொய் சொல்லி ஏமாற்றிவிடலாம் என்று தான் நினைக்கிறார். ஆனால், பாக்கியா அனைத்தையுமே கண் முன்னாடி பார்த்ததால் எதையுமே நம்ப தயாராக இல்லை. மேலும், இத்தனை நாட்களாக வேலை வேலை என்று தான் ஓடுகிறார். அதனால் தான் பிள்ளைகளிடம் கூட நேரம் செலவிட முடியவில்லை என்று பாக்கியா நினைத்தார்.
தமிழக பள்ளி மாணவர்களுக்கான எச்சரிக்கை அறிவிப்பு – உத்தரவு வெளியீடு!
ஆனால், இப்படிப்பட்ட மர்மம் கோபியின் பின்னால் ஒளிந்திருக்கும் என பாக்கியா கனவில்கூட நினைக்கவில்லை. கோபியின் முகத்தை நேருக்கு நேர் பார்த்து இத்தனை நாட்களாக உங்களுக்கு பிடிக்காதவளாய் உங்கள் கூடவே இருந்தேன். ஆனால், தற்போது முதன்முறையாக உங்களுக்கு பிடித்த ஒன்றை செய்யப் போகிறேன் என கூறுகிறார். மேலும், நீங்கள் உங்களுக்கு பிடித்த பெண்ணுடன் வாழுங்கள் என கூறிவிட்டு வீட்டை விட்டே பாக்கியா கிளம்புகிறார். மேலும், குடும்பத்தினர்கள் பாக்கியாவை எவ்வளவோ சமாதானம் செய்தும் கூட பாக்கியா வீட்டை விட்டு சென்றுவி
Exams Daily Mobile App Download
பின்னர், கோபியையும் ராதிகாவையும் பாக்கியா சேர்த்துவைப்பாரா அல்லது கோபிக்கு எதிராக மொத்த குடும்பத்தையும் பாக்கியாவே கவனித்து கொள்வாரா என எதிர்பார்த்த சமயத்தில் கோபி மீது பாக்கியா காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார். அதாவது, பாக்கியாவிற்கு தெரியாமலேயே விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கி திருட்டுத்தனமாக ராதிகாவை திருமணம் செய்ய நினைத்ததற்காக கோபியின் மீது புகார் கொடுக்கிறார். இதனிடையே, கோபியை போலீசார் கைது செய்வது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.