தமிழக பள்ளி மாணவர்களுக்கான எச்சரிக்கை அறிவிப்பு – உத்தரவு வெளியீடு!
தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல் தொடர்பான சுற்றறிக்கை ஒன்றை சமூக பாதுகாப்புத்துறை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ளது. இதில் கூறப்பட்டுள்ளவற்றை பற்றி விரிவாக பார்ப்போம்.
மாணவர்கள் கவனத்திற்கு
தமிழகத்தில் கடந்த ஜூன் 13ம் தேதி முதல் 2022 – 2023ம் கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல் தொடர்பான சுற்றறிக்கை ஒன்றை சமூக பாதுகாப்புத்துறை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ளது. இந்த சுற்றறிக்கையில், தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும். அத்துடன் மாணவர்கள் தலையில் எண்ணெய் வைத்து, தலை வார வேண்டும்.
தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்திற்கு சனி & ஞாயிறுகளில் கலந்தாய்வு? முக்கிய உத்தரவு!
அத்துடன் மாணவர்கள் காலில் கட்டாயமான முறையில் காலணி அணிந்து வர வேண்டும். மேலும் அனைத்து மாணவர்களும் சீருடை அணிந்து வர வேண்டும். அதிலும் குறிப்பாக மாணவ, மாணவிகளுக்கு பிறந்தநாள் என்றாலும் சீருடை அணிந்து வர வேண்டும். அத்துடன் பள்ளிக்கு இருசக்கர வாகனம், செல்போன் உள்ளிட்டவை கொண்டு வர தடை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் அடிக்கடி கை, கால்களைக் கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து விடுப்பு எடுக்க பெற்றோர், ஆசிரியர் கையெழுத்து பெற்று அதன்பின்பு விடுப்பு எடுக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
இதனை தொடர்ந்து மாணவர்கள் கட்டாயமாக போதைப் பொருட்களை பயன்படுத்த கூடாது எனவும் இதனை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். மேலும் டாட்டூ போட கூடாது எனவும் மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது காப்பு, கம்மல், செயின், கயிறு ஆகியவற்றை அணியக் கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளுக்கு நீதிநெறிக் கதைகள், தெனாலிராமன் கதைகள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் கதைகள் உள்ளிட்ட நல்லொழுக்க கதைகளை எடுத்துரைக்க வேண்டும் என்றும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
V
Ayya. Laptop ..yappoluthu
Kindly include all in college sise also ….