மதுரை மாநகராட்சியில் 2,500 காலிப்பணியிடங்கள் – அரசுக்கு கோரிக்கை!
மதுரை மாநகராட்சியில் தினமும் 80% குப்பைகள் மட்டும் சேகரிக்கப்படுகின்றன, மீதமுள்ள 20% குப்பைகள் சேகரிக்கப்படவில்லை என புகார்கள் எழுந்துள்ளது. இது குறித்து மதுரை மாநகராட்சி சிஐடி சங்க பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் விளக்கம் தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகராட்சி:
தமிழகத்தில் மக்கள் தொகையின் அடிப்படையில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் என பிரிக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணி செய்கின்றனர். அதில் நிரந்தர பணியாளர்கள் வெறும் 50,000 பேர் என கூறப்படுகிறது. தற்போது தூய்மை பணியாளர்கள் பற்றாக்குறையாக இருந்தால் தினமும் 20 சதவீதம் குப்பை தேங்குவதாக கூறப்படுகிறது. கொரோனா காலத்தில் வருவாய் குறைந்ததன் காரணமாக காலிப்பணியிடங்களை நிரப்ப முடியவில்லை என கூறப்படுகிறது.
HDFC வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் சேவைகள் முடக்கம்!
மதுரை மாநகராட்சியில் தற்போது உள்ள மக்கள்தொகை மற்றும் வீடுகள் எண்ணிக்கையின் அடிப்படையில் 6 ஆயிரம் தூய்மைப் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால் தற்போது 3,500 பேர் மட்டும் பணிபுரிகிறார்கள். அவற்றில் 800 பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாகவும் மற்றவர்கள் அனைவரும் ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் தினக்கூலிப் பணியாளர்களாக வேலை செய்து வருகின்றனர். தற்போது 2,500 காலிப்பணியிடங்கள் மதுரை மாநகராட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே தற்போது நிரப்பப்படாமல் உள்ள 2,500 பணியிடங்களுக்கு, ஏற்கெனவே பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்களையே நியமித்து பணி நிரந்தரம் செய்யலாம். வாரிசு பணியாளர்கள் 500 பேர் விண்ணப்பித்து அவர்களுக்கு இதுவரை பணி வழங்கப்படவில்லை. நிதிப் பற்றாக்குறை இருப்பதாக மாநகராட்சி நிர்வாகத்தினர் காரணம் சொல்கின்றனர் என கோரிக்கை முன்வைக்கப்பட்டு உள்ளது.