HDFC வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் சேவைகள் முடக்கம்!
HDFC வங்கி பல்வேறு காரணங்களுக்காக இன்று இரவு 9 மணி முதல் தொடர்ந்து 18 மணி நேரத்திற்கு ஆன்லைன் வங்கி சேவைகளை முடக்குவதாக அறிவித்துள்ளது.
ஆன்லைன் சேவை:
HDFC வங்கி மிகப்பெரிய தனியார் துறை வங்கியாகும். நாடு முழுவதும் 5,500க்கும் மேற்பட்ட கிளைகள் இந்த வங்கிக்கு உள்ளது. மொத்த வங்கி கிளைகளிலும் சேர்த்து 1.16 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். கடந்த 2020 டிசம்பரில் ரிசர்வ் வங்கி எச்டிஎப்சி வங்கி தனது தொழில்நுட்ப சிக்கல்களை தீர்க்கும் வரை அனைத்து புதிய டிஜிட்டல் வெளியீடுகளையும் நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்தியது. முன்னதாக எச்டிஎப்சி வங்கியின் கிளைகளில் பல முறை டிஜிட்டல் முறை செயல்பாடுகள் முறையாக செயல்படாமல் இருந்ததே இந்த தடை விதிப்புக்கு காரணம்.
உலக தடகள U20 சாம்பியன்ஷிப் – 10,000 மீ ஓட்டத்தில் வெள்ளி வென்ற இந்திய வீரர் அமித்!
இதனால், புதிய டிஜிட்டல் தயாரிப்புகள் மற்றும், புதிய கடன் அட்டைகளை வழங்குவதற்கும் தடை விதித்தது. தற்போது, எச்டிஎப்சி வங்கி மீதான இந்த தொழில்நுட்ப தடை நீக்கப்படுவதாக இந்திய ரிசர்வ் வங்கி ஆகஸ்ட் 17ம் தேதி வங்கி நிர்வாகத்தினருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. மேலும், புதிய கடன் அட்டைகளை வழங்குவதற்கு அனுமதி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதன் பிறகு, வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி, சசிதர் ஜெகதீசன், தனது ஊழியர்களுக்கு மின்னஞ்சல் ஒன்றையும் பணி தொடர்பாக அனுப்பியுள்ளார்.
அனைத்து நாட்களும் கடைகள் இயங்க அனுமதி – வியாபாரிகள் கோரிக்கை!
தற்போது, திட்டமிடப்பட்டுள்ள பராமரிப்பு பணிகள் காரணமாக கடன் தொடர்பான சேவைகள் HDFC வங்கி நெட் பேங்கிங்கில் ஆகஸ்ட் 21ம் தேதி இரவு முதல் ஆகஸ்ட் 22ம் தேதி மதியம் 3 மணி வரை தொடர்ந்து 18 மணி நேரத்திற்கு ஆன்லைன் சேவைகள் முடக்கப்படும் என்று HDFC வங்கி ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. மேலும், இதன் காரணமாக வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சிரமத்திற்கு வருந்துவதாகவும் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.