தமிழக காவலர்களுக்கான 101 புதிய திட்டங்கள் – முதல்வர் மு க ஸ்டாலின் அறிவிப்பு!
தமிழக சட்டசபையில் காவல் துறைக்கான 101 புதிய அறிவிப்புகளை தமிழக முதல்வர் வெளியிட்டுள்ளார். இது குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.
புதிய அறிவிப்புகள்:
தமிழகத்தில் பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து தற்போது துறை வாரியான மானிய கோரிக்கை விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அண்மையில் காவல்துறை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அதில் காவல் துறைக்கான 101 புதிய அறிவிப்புகளை தமிழக முதல்வர் வெளியிட்டார் .
தமிழக ரேஷன் கடைகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு – கூட்டுறவுத் துறை செயலாளர் பேட்டி!
அதாவது சென்னையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் வகையில் புதிதாக 2000 CCTV கேமராக்கள் பொருத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இப்பணிக்காக ரூ. 5 கோடியே 50 லட்சம் செலவிடப்பட உள்ளதாகவும் கூறினார். அத்துடன் சென்னையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள 57 போக்குவரத்து சிக்னல்கள் ரூ. 4,27,50,000 செலவில் மாற்றம் செய்யப்படும்.
அதனைத்தொடர்ந்து கிரிப்டோ கரன்சி மோசடியைக் கண்டுபிடிக்கும் செயின் பகுப்பாய்வு ரீயாக்டர் கருவி ரூ.1 கோடியில் வாங்கப்படும்.மேலும் சென்னை சித்தாந்தரி பேட்டையில் 200 பெண் காவலர்கள் தங்கும் வகையில் 10 கோடியே 47 லட்சம் ரூபாய் செலவில் மகளிர் காவலர் விடுதி அமைக்கப்படும். மெரினா மீட்பு பணிகள் நிலைய பணியாளர்களுக்கு இடர்ப்படி ரூ. 6,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற எண்ணற்ற புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.