தமிழக ரேஷன் கடைகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு – கூட்டுறவுத் துறை செயலாளர் பேட்டி!
தமிழக ரேஷன் கடைகளில் ஊழியர்கள் சில நேரங்களில் அட்டைதாரர்களை அவர்களுக்கு விருப்பமில்லாத பொருட்களை வாங்க வற்புறுத்துவதாக புகார்கள் எழுந்து வருகிறது. இது குறித்து பேசிய கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ரேஷன் கடை:
தமிழக ரேஷன் கடைகளில் அட்டைதாரர்களுக்கு அரசு சார்பாக மாதந்தோறும் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அது போக உப்பு, சோப்பு உள்ளிட்ட மற்ற பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பொருட்களை வாங்க சொல்லி கடை ஊழியர்கள் கட்டாயப்படுத்துவதாக அட்டைதாரர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
NCRTC போக்குவரத்து கழகத்தில் ரூ.1,80,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
இதனால் திட்டமிட்டதைவிட அதிக தொகையை செலவிட நேர்வதாகவும் கூறுகின்றனர். இது குறித்து பேசிய உணவு மற்றும் கூட்டுறவுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ரேஷன் கடைகளுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதாவது, ரேஷன் கடைகளில் விருப்பமில்லாத பொருட்களை வாங்க சொல்லி ஊழியர்கள் எக்காரணத்தை கொண்டும் பொதுமக்களை கட்டாயப்படுத்த கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.