கொளுத்தும் வெயிலில் ஒரு குட் நியூஸ் …! 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை – வானிலை மையம் வெளியிட்ட தகவல்!
தமிழகத்தில் திண்டுக்கல் தேனி, தென்காசி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அத்துடன் வெப்பநிலை குறித்த விவரங்களும் வெளியாகியுள்ளது.
வானிலை தகவல்:
தமிழகத்தில் தற்போது நிலவும் கோடை காலம் காரணமாக வெப்பநிலை 100 டிகிரி செல்சியஸை தாண்டி பதிவாகி வருகிறது. கொளுத்தும் வெப்பத்திற்கு மத்தியில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழக காவலர்களுக்கான 101 புதிய திட்டங்கள் – முதல்வர் மு க ஸ்டாலின் அறிவிப்பு!
அதில் இன்று (ஏப்.22) தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. அதே போல ஏப்.23 ஆம் தேதி அன்று தமிழகத்தில் நீலகிரி, திருப்பூர், கோயம்புத்தூர், திருநெல்வேலி, ஈரோடு, திண்டுக்கல், சேலம், தேனி, திருவண்ணாமலை திருப்பத்தூர், தர்மபுரி, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, வேலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
அதே போல புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை 2 – 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும். மேலும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மேக மூட்டத்துடன் காணப்படும். சென்னை பொறுத்தவரை வெப்பநிலை அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது