தமிழக அரசுப் பள்ளிகளில் பணிமாறுதல் பெற விண்ணப்பிக்கலாம் – செப் 30 கடைசி நாள்!
தமிழத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு இடமாறுதல் பெற பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அனுமதி அறிவிப்பு:
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் இதுவரை கலந்தாய்வு மூலம் பணி மாறுதல் செய்யப்பட்டனர். இந்நிலையில் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் இடமாறுதல் பெற்று பணியாற்ற விரும்பினால், எமிஸ் இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும்.
தமிழகத்தில் எலுமிச்சையின் விலை திடீர் உயர்வு – கிலோவுக்கு ரூ.150க்கு விற்பனை!
மேலும் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் வருகிற செப். 30 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு உரிய முறையில் கவுன்சிலிங் நடத்தி தேவையான பணியிடங்களை தேர்வு செய்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தொடக்கக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.