காவல்துறையில் 253 காலியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் – இன்று வெளியீடு!
புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள 253 காவலர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி இருக்கிறது.
தேர்வு முடிவுகள்
தமிழகத்தில் மாநில காவல்துறையில் காலியாக உள்ள 253 காவலர் பணியிடங்களுக்கு கடந்த 4 ஆம் தேதி எழுத்து தேர்வு நடைபெற்றது. காவல்துறையில் காலியாக உள்ள 253 பணியிடங்களுக்கு 3000க்கு மேற்பட்டவர்கள் தேர்வு எழுதினார்கள். இந்நிலையில் தற்போது காவலர் பணிக்கான எழுத்து தேர்வு முடிவுகளை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.
IBPS RRB XII வேலைவாய்ப்பு 2023 – 8000+ காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !
அதன் படி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் பெயர் பட்டியல் புதுச்சேரி போலீஸ் தலைமையகம் முன் ஒட்டப்பட்டுள்ளது. காவலர் பணிக்கு தேர்வு எழுதியவர்கள் அதனை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதி தேர்வு நடத்தப்பட்டு பின் பணி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.