இந்தியாவில் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது – RBI ஆளுநர் அளித்த விளக்கம்!
இந்தியாவில் மீண்டும் 500 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுமா? என்ற கேள்வி எழுந்து வருகிறது. இது குறித்து மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார்.
500 ரூபாய் நோட்டுகள்:
இந்தியாவில் மத்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. இதனையடுத்து மக்கள் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றியும் சேமிப்பு கணக்கில் முதலீடும் செய்து வருகின்றனர். செப். 30ம் தேதி வரை ரூபாய் நோட்டுகளை மாற்றி கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 2000 ரூபாய் நோட்டுகளை போல 500 ரூபாய் நோட்டுகளையும் திரும்ப பெறும் திட்டம் உள்ளதா?என்ற கேள்வி எழுந்துள்ளது.
காவல்துறையில் 253 காலியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் – இன்று வெளியீடு!
அதே போல 2000 ரூபாய் நோட்டுக்கு பதில் 1000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்படுமா? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது குறித்து பேசிய மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் 500 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற பட மாட்டாது. மேலும் புதிய 1000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் திட்டம் இல்லை என்றும் கூறியுள்ளார். இதுவரை 85% 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.