மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வருமா? அரசு ஊழியர்கள் வேண்டுகோள்!
நாடு முழுவதும் பல மாநில அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி கோரிக்கை வைத்து வரும் நிலையில் பஞ்சாப் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படவில்லை என அதிரடி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
பழைய ஓய்வூதிய திட்டம்:
இந்தியாவில் கடந்த 2003 ஆம் ஆண்டு பழைய ஓய்வூதிய திட்டம் அரசு ஊழியர்களுக்கு அமலில் இருந்தது. இந்த திட்டத்தில் நிலையான ஓய்வூதியம் உள்பட பல வசதிகள் இருந்தது. அதன் பின் 2004 ஆம் ஆண்டு முதல் அரசு ஊழியர்களுக்கு தேசிய பென்சன் திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது அரசு ஊழியர்களுக்கு தேசிய பென்சன் திட்டம் அமலில் இருக்கிறது. இந்த திட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தின் மூலம் கிடைத்த உத்தரவாதம் எதுவும் கிடைக்காமல் இருந்தது.
Exams Daily Mobile App Download
அதனால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி பல மாநில அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். ஒரு சில மாநில அரசுகள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது. ஆனால் ஒரு சில மாநிலங்களில் இன்னும் அரசு இது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் தற்போது ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.
TNPSC Group 4 & 8 தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான மாதிரி தேர்வு !
ஆட்சி பொறுப்பேற்பதற்கு முன்னதாக பஞ்சாபில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என ஆம் ஆத்மி வாக்குறுதி அளித்தது. ஆனால் ஆட்சி பொறுப்பேற்று பல மாதங்கள் ஆன நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான தீர்மானத்தை பஞ்சாப் அரசு கொண்டுவரவில்லை. அதனால் அரசு ஊழியர்கள் பல விதங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது பஞ்சாப் நிதியமைச்சராக இருக்கும் ஹர்பால் சிங் சீமா ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினார். ஆனால் அவரே தற்போது ஏமாற்றம் அளிக்கும் வகையில் நடந்து கொள்வதால் ஊழியர்கள் வேதனை அடைந்துள்ளனர்.