மகளிர் T20 உலகக்கோப்பை: தோல்வியுடன் தொடரை தொடங்கிய இந்தியா.. அரையிறுதிக்கு முன்னேறுமா??
2024 மகளிர் T20 உலகக்கோப்பை தொடர் கடந்த அக்டோபர் 3ம் தேதி முதல் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடர் ஆரம்பித்து கிட்டத்தட்ட 2 நாட்கள் ஆன நிலையில் ஒவ்வொரு போட்டியும் மிக விறுவிறுப்பாக செல்வதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் இந்திய அணி தனது முதல் போட்டியில், நியூசிலாந்தை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 160 ரன்கள் மட்டுமே எடுத்தது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இந்த இலக்கை எளிதில் எட்டி வெற்றி பெறலாம் என இந்தியா களமிறங்கியது. ஆனால் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல், இந்தியா 19 ஓவரில் 102 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம், 58 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இத்தொடரில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடத்தை பிடிக்க வேண்டும். அந்த வகையில் இந்திய அணி தற்போது கடைசி இடத்தில் இருப்பதால் இனி வரும் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி சுற்றுக்கு செல்ல முடியும்.
























