ஊழியர்களுக்கு ஓய்வூதிய உயர்வு எப்போது? வலுக்கும் கோரிக்கைகள்!
திருச்சி மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் தொழிலாளர்களின் மாத ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும், ஓய்வூதிய நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்பது தொடர்பான பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதிய உயர்வு:
தமிழகத்தில் அவ்வப்போது பல்வேறு துறையை சார்ந்த அரசு ஊழியர்கள் ஓய்வூதிய உயர்வு வழங்க வேண்டும் என பல கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர். மேலும், ஓய்வூதிய உயர்வு குறித்தான சில கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திருச்சி மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
Exams Daily Mobile App Download
அதாவது, தொழிலாளர்கள் நல வாரியத்தில் ஆன்லைன் மூலமான பதிவு புதுப்பித்தல் செய்வதற்கு பதிலாக நேரடியாக தொழிலாளர்கள் நல வாரியத்திலேயே புதுப்பித்தலை துவங்க வேண்டும் எனவும், நிலுவையில் உள்ள கோப்புகள் உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு கட்டுமான தொழிலாளர்களுக்குரிய பண பலன்களை உடனடியாக வழங்கிட வேண்டும் எனவும், கட்டுமான பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் இருந்தே ஓய்வூதியம் வழங்கபட வேண்டும் எனவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று – அதிர்ச்சியில் பொதுமக்கள்!
இதனைத்தொடர்ந்து, கட்டுமான தொழிலாளர்கள் ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்த நாளில் இருந்தே நிலுவை தொகையுடன் சேர்த்து மாத ஓய்வூதியத்தையும் வழங்க வேண்டும் எனவும், தொழிலாளர்களின் மாத ஓய்வூதியத்தை 3000 ஆக உயர்த்த வேண்டும் எனவும், கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய அலுவலகத்தில் இருக்கும் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புவதற்கான நடவடிக்கைகளை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.