தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று – அதிர்ச்சியில் பொதுமக்கள்!
தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு தற்போது கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இந்நிலையில், அவர் வீட்டு தனிமையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரோனா உறுதி
தமிழகத்தில் கடந்த ஒரு சில வாரங்களாக கொரோனா பரவல் பாதிப்புகளின் எண்ணிக்கை ஆயிரங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதாவது, கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பிறகு குறைந்து வந்த கொரோனா 3ம் அலை பாதிப்புகளை அடுத்து தமிழகம் முழுவதும் நோய்த்தடுப்பு கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்பட்டது. இதை தொடர்ந்து மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு மீண்டு வர துவங்கினார்கள். இந்த நிலையில் நாடு முழுவதும் கடந்த ஒரு சில வாரங்களாக கொரோனா 4ம் அலை பாதிப்புகள் புதிய தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.
Exams Daily Mobile App Download
இதன் மூலம் ஒரு நாளைக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதே போல தமிழகத்திலும் சென்னை,காஞ்சீபுரம், செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி உள்ளது. இதன் மூலம் ஒரு நாளைக்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதியாகி வருகிறது. இந்த சூழலில் பொது மக்கள் மீண்டுமாக முகக்கவசங்களை அணிய வேண்டும் என்றும், தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
வங்கி தேர்வுகளுக்கு தயாராகி வருவோருக்கு ஆன்லைன் மாதிரி தேர்வு – அறிவிப்பு வெளியீடு!
இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு இன்று (ஜூலை 12) கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. முதல்வருக்கு உடற்சோர்வு ஏற்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொடர்பான பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளதை அடுத்து அவர் வீட்டு தனிமையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் முதல்வர் தற்போது வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார்.