ஒரே நேரத்தில் 32 பேர் வாட்ஸ்அப் காலில் பேசலாம் – வெளியான புதிய அப்டேட்!
வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது 32 பேர் ஒரே நேரத்தில் வாய்ஸ் கால் பேசும்படியான புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
வாட்ஸ்அப் :
வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் அனுபவத்தை மேலும் சிறப்பாக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு அப்டேட்களை வெளியிட்ட படியே இருந்து வருகிறது. அந்த வகையில், வீடியோ கால் மூலமாக ஸ்க்ரீன் ஷேர் செய்வது, புதுவிதமான ஸ்டிக்கர்களை உருவாக்குவது, தெரியாத நபர்களிடம் இருந்து வரும் காலை mute செய்வது என ஏகப்பட்ட அப்டேட்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அலர்ட்டா இருங்க..தமிழக மின்சாரத்துறையின் புதிய திட்டம் – இனி உடனே SMS வரும்!
இது மட்டுமல்லாமல், பயனர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் ஜிமெயில் மூலமாக லாகின் செய்யும் வசதி, ஒரே அக்கௌன்ட்டில் ஒன்றிற்கு மேற்பட்ட அக்கௌன்ட்டை லாகின் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பயனர்களுக்கான புதிய அப்டேட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அதாவது, தற்போது வரையிலும் வாட்ஸ்அப் காலில் 15 பேர் மட்டும் குரூப் கால் மூலமாக பேசும்படியாக வசதி வழங்கப்பட்டிருந்தது. அதனை இன்னும் கூடுதலாக 32 பேர் வரையிலும் வாட்ஸ்அப் கால் மூலமாக பேசும்படியான புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் தற்போதைக்கு வாட்ஸ்அப் டெஸ்டர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும், அடுத்தடுத்த நாட்களில் அனைத்து பயனர்களும் பயன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.