அலர்ட்டா இருங்க..தமிழக மின்சாரத்துறையின் புதிய திட்டம் – இனி உடனே SMS வரும்!
தமிழகத்தில் மின் இணைப்பை துண்டிப்பு செய்வதற்கு முன் பயனர்களை எச்சரிக்கும் வகையிலான புதிய நடைமுறையை கொண்டு வர மின்வாரியம் திட்டமிட்டு வருகிறது.
மின் இணைப்பு:
தமிழகத்தில் மின்சார துறையை சீரமைக்கும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. விரைவில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என்று தகவல்கள் வந்துள்ளது. இது தொடர்பான பணிகள் தமிழக முழுவதும் நடைபெற்று வருகிறது. இது ஸ்மார்ட் மீட்டர் வந்த பிறகு மின் கணக்கீடு குறித்து விவரங்கள் மின் பயனர்களின் தொலைபேசிக்கு நேரடியாக SMS அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யும் முறையும் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மின் பயன்கள் தங்களது மின் கட்டணத்தை செலுத்த தவறினால் உடனடியாக மின் இணைப்பு துண்டிப்பு செய்யப்படும். இது குறித்து முன்கூட்டியே பயனர்களுக்கு தெரிவிக்கும் வகையில் அலர்ட் கொடுக்கும் வகையில் அதில் புதிய நடைமுறையை மின்வாரியம் அறிமுகப்படுத்த உள்ளது. அதாவது எஸ் எம் SMS (அ) EMail வாயிலாக பயனர்களுக்கு உடனடியாக குறுஞ்செய்தி அனுப்பப்படும். இதனை அறிந்து முன்கூட்டியே மின் கட்டணத்தை செலுத்தி அடுத்த 6 மணி நேரத்தில் பயனர்கள் மின் இணைப்பை பெறலாம்.