களைகட்டும் விநாயகர் சிலைகள் தயாரிப்பு – உயர்நீதிமன்றம் விதித்த அதிரடி உத்தரவு!
நடப்பாண்டு விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான சிலைகள் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இது குறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை ஆனது முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
உயர் நீதிமன்ற கிளை உத்தரவு:
தமிழகத்தில் செப்டம்பர் 18ஆம் தேதி அன்று நடப்பாண்டில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதனால் தற்போது தமிழகமெங்கும் விநாயகர் சிலைகள் தயாரிப்பு மற்றும் விற்பனைகள் அமோகமாக நடந்து வருகிறது. இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகள் தயாரிப்பு மற்றும் கரைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
நீங்களும் மத்திய அரசில் வேலை பாக்கலாம் – இதோ உங்களுக்கான வாய்ப்பு || மிஸ் பண்ணிடாதீங்க!
இந்த மனுவினை நேற்று விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகள் தயாரிக்க கூடாது என்று பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு உள்ள நிலையில், எவ்வாறு அந்த சிலைகள் தயாரிக்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
மேலும் இது குறித்து தமிழக அரசு இன்று பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ரசாயம் அற்ற களிமண்ணால் மட்டுமே விநாயகர் சிலைகளை தயாரிக்க வேண்டும் என்றும், விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.