ஜெனிக்கு தெரிய வரும் செழியன் மாலினி உறவு.. பாக்கியா செய்யப்போவது என்ன? – “பாக்கியலட்சுமி” சீரியல் அப்டேட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், செழியன் மாலினி விஷயம் பாக்கியாவிற்கு தெரிந்த பின் கூட அவர் எந்த முடிவும் எடுக்காமல் இருக்கிறார். இந்நிலையில் ஜெனிக்கு இந்த விஷயம் தெரிய வர அவர் வீட்டை விட்டு வெளியே செல்கிறார்.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில், மாலினி செழியன் பற்றிய உண்மையை பாக்கியா தெரிந்து கொள்கிறார். இனிமேல் செழியன் வாழ்க்கையில் நீ வரக்கூடாது என பாக்கியா எச்சரிக்கிறார். ஆனால் அதை காதில் வாங்காமல் மாலினி நேராக செழியன் வீட்டிற்கு வருகிறார். அங்கே பாக்கியா அவரை தடுக்க, கோபி அவரை உள்ளே விடுகிறார். இந்நிலையில் மாலினி நான் செழியனிடம் பேச வேண்டும் என சொல்கிறார். உன்னிடம் பேச எதுவும் இல்லை என செழியன் சொல்ல, அப்போது ஜெனி வருகிறார்.
BAN vs SL 2023 WC Updates: பங்களாதேஷ் டாஸ் வென்று பவுலிங் தேர்வு!
மாலினி செழியன் என்னை ஏமாற்றிவிட்டதாக புலம்புகிறார். ஆனால் ஜெனிக்கு எதுவும் புரியாமல் இருக்கிறது.அதனால் மாலினி செழியனுடன் எடுத்த புகைப்படத்தை எல்லாம் காட்டுகிறார். அதை பார்த்து ஜெனி அதிர்ச்சி அடைய இந்த விஷயம் பாக்கியாவிற்கு தெரியும் என மாலினி சொல்கிறார். உடனே ஜெனிக்கு கோவம் வர இதெல்லாம் இன்றைய எபிசோடில் வர இருக்கிறது.