இந்திய மாணவர்களுக்கு “ஒரே நாடு, ஒரு அடையாள அட்டை” – மத்திய அரசு அறிமுகம்!
இந்திய மாணவர்களுக்கு ஆதார் அட்டை போல ஒரே நாடு, ஒரு அடையாள அட்டையை மத்திய அரசு அறிமுகம் செய்ய இருக்கிறது. இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
அரசு அறிவிப்பு
இந்தியாவில் மக்களுக்கு அடிப்படை ஆவணங்களில் ஒன்றாக ஆதார் அட்டை இருக்கிறது. இந்நிலையில் ஆதார் அட்டையை போல இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நாடு ஒரு அடையாள அட்டை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த அட்டையில் மாணவர்களுக்கு தனித்துவமான ஐடி இருக்கும். அதனை ஸ்கேன் செய்யும் போது மாணவர்களின் கல்வி பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.
விண்ணை முட்டும் வெங்காயத்தின் விலை – அரசுக்கு வந்த முக்கிய கோரிக்கை!
இந்த அட்டைக்கு automated permanent academic account registry (APAAR ) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டை அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும். அபார் அடையாள அட்டை பள்ளியில் இருந்து கல்லூரிக்கு மாணவர்கள் மாறுவதை எளிமையாக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அட்டை குறித்த கூடுதல் தகவல்களுக்கு abc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.