Post Office ல் மாதம் ரூ.2500 வரை அக்கவுண்டுக்கு வரும் திட்டம் – முழு விவரம் இதோ!

0
Post Office ல் மாதம் ரூ.2500 வரை அக்கவுண்டுக்கு வரும் திட்டம் - முழு விவரம் இதோ!
Post Office ல் மாதம் ரூ.2500 வரை அக்கவுண்டுக்கு வரும் திட்டம் - முழு விவரம் இதோ!
Post Office ல் மாதம் ரூ.2500 வரை அக்கவுண்டுக்கு வரும் திட்டம் – முழு விவரம் இதோ!

போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்களில் பணத்தை முதலீடு செய்து குறுகிய காலத்தில் இரட்டிப்பாக மாற்றிட முடியும். அந்த வகையில் மாத வருமான திட்டம், மாதம் ரூ.2500 வரை வட்டியை அள்ளித்தரும் திட்டமாக சிறந்து விளங்குகிறது. மேலும் குழந்தைகளின் நல்வாழ்வுக்கான பிற அம்சங்களில் முதலீடு செய்ய இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

சூப்பரான திட்டம்:

போஸ்ட் ஆபீஸ் சார்பில் தேசிய மாதாந்திர சேமிப்பு வருவாய் திட்டம் (MIS) செயல்படுத்தப்பட்டு வருகிறது. தங்கள் முதலீடுகளை பாதுகாப்பாக மேற்கொள்ளவும், எந்த வித ரிஸ்க்கும் இல்லாமல் லாபம் அடையவும் நினைக்கின்ற இந்தியர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக அமைகிறது. மேலும் ரிஸ்க் நிறைந்த முதலீட்டுத் திட்டங்களில் சேருவதைக் காட்டிலும், பாதுகாப்பு கொண்ட அரசு திட்டத்தில் முதலீடு செய்வதையே மக்கள் விரும்புகின்றனர். அஞ்சல் நிலையத்தின் MIS அக்கவுண்டில் முதலீடு செய்வதன் மூலமாக ஒருவர் மாதந்தோறும் ரூ 2500 வரை பணப்பயன் பெற முடியும்.

Exams Daily Mobile App Download

தேசிய சேமிப்பு சான்றிதழ் என்பது ஒரு நிலையான வருமான முதலீட்டுத் திட்டம் ஆகும். இது ஒரு சேமிப்பு பத்திரத் திட்டம், இதன் முதன்மை நோக்கம் என்பது, சிறிய மற்றும் நடுத்தர வருவாய் முதலீட்டாளர்களை, முதலீடு செய்ய வைப்பது தான். மேலும் MIS கணக்கைத் திறக்க விரும்பும் ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள், கணக்கைத் திறப்பதற்கான குறைந்தபட்சத் தொகை ரூ. 1,000 என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் அஞ்சலகத்தின் வழிகாட்டுதல்களின்படி, அதன்பின் வைப்புத்தொகை ரூ.1,000 மடங்குகளில் இருக்க வேண்டும்.

தமிழகத்தில் தீவிரமெடுக்கும் கொரோனா தொற்று – பொது மக்களுக்கு ரூ.500 அபராதம்!

இதையடுத்து அதிகபட்ச முதலீட்டு வரம்பு ஒற்றைக் கணக்கிற்கு ரூ.4.5 லட்சமாகவும், கூட்டுக் கணக்குகளுக்கு ரூ.9 லட்சமாகவும் இருக்கும். ஒரு தனிநபர் அதிகபட்சமாக ரூ 4.5 லட்சத்தை MIS இல் முதலீடு செய்யலாம். இந்த மாதாந்திர வருமான திட்டத்தின் கீழ் யாராவது கூட்டுக் கணக்கைத் திறந்து அதில் ரூ .9 லட்சம் வரை டெபாசிட் செய்தால், அவர்கள் ஒவ்வொரு மாதமும் ரூ. 4,950 சம்பாதிக்கலாம். இதுவே தனிக் கணக்கு என்றால் மாதம் ரூ.2,475 பெறலாம்.

ஏனெனில் இந்த சேமிப்பு கணக்கில் அசல் மீது 6.6% வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். எனவே, நீங்கள் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் 4,950 ரூபாய் வட்டி பெறுவீர்கள். மேலும் குழந்தையின் பெயரில் ரூ.3.50 லட்சம் டெபாசிட் செய்தால், வட்டியாக ரூ.1,925 கிடைக்கும். அதிகபட்சமாக ரூ.4.5 லட்சத்தை முதலீடு செய்தால், மாதம் ரூ.2,475 வட்டியாகப் பெறுவீர்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!