தமிழகத்தில் இன்று (04.05.2025) கனமழைக்கு வாய்ப்பு…!! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!!
அரபிக்கடலில் அமைந்துள்ள லட்சத்தீவு பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் கத்திரி வெயில் காலத்திலும் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், இன்று (மே 5) எந்தெந்த பகுதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரேஷன் பொருட்கள் வாங்காதவர்களின் கார்டுகள் கேன்சல்..!! அரசு அறிவிப்பு..!! தடுக்க உடனே இத செய்யுங்க..!!
அதன்படி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், நீலகிரி மற்றும் புதுச்சேரியின் ஒரு சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கத்திரி வெயிலின் தாக்கம் சற்று அதிகமாவே இருக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


























