தமிழகத்தில் வரும் மே 7 தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…!! எந்த மாவட்டத்திற்கு தெரியுமா..?
தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் நடைபெறும் புகழ்பெற்ற திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகளின் போது பல்வேறு பகுதிகளில் இருந்து, அதில் கலந்துகொள்ள மக்கள் வருவது வழக்கம். அத்தகைய, சமயத்தில் அங்கு எந்த வித அசம்பாவிதங்களும் நடக்காமல் தடுக்க உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் இன்று (04.05.2025) கனமழைக்கு வாய்ப்பு…!! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!!
அந்த வகையில், தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான தஞ்சை பெரிய கோவிலின் திருத்தேரோட்டம் வரும் மே 7 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் வருவார்கள். இதனால், அம்மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


























