TNPSC குரூப் 1 தேர்வில் 6 தவறான வினாக்கள் – மதிப்பெண்கள் வழங்க தேர்வர்கள் கோரிக்கை!!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பாக துணை ஆட்சியர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர் பணிகளுக்கான குரூப் 1 தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. இதில் 1.31 லட்சம் தேர்வர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள். குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 6 கேள்விகள் தவறாக உள்ளதாக தேர்வர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுகள்:
தமிழகத்தில் உள்ள துணை ஆட்சியர், காவல்துறை உள்ளிட்ட பணிகளை உள்ளடக்கிய 66 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடந்த வருடம் வெளியிடப்பட்ட குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பில் 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். நேற்று தமிழகம் முழுவதும் சுமார் 16 மையங்கள் அமைக்கப்பட்டு முதல்நிலை தேர்வு நடத்தப்பட்டது. காலை 9.15 மணிக்கு தேர்வு தொடங்கி 1.15 வரை நடைபெற்றது. தேர்வில் 1.31 லட்சம் பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள்.
ஜனவரி 18 முதல் அரசு கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு – கட்டுப்பாடு அலுவலர் அறிவிப்பு!!
குரூப் 1 தேர்வில் பொது அறிவியலில் 175 வினாக்களும் திறனாய்வு தேர்வில் 25 வினாக்களும் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்பட்டு இருந்தது. ஒவ்வொரு வினாக்களும் ஆப்ஜெக்ட்டிவ் வடிவில் இருந்தது. அதாவது ஒரு கேள்விக்கு 4 பதில்கள் இருக்கும் சரியான விடையை தேர்வர்கள் தேர்ந்தெடுத்து கொடுக்கப்பட்ட ஓஎம்ஆர் விடைத்தாளில் குறிக்க வேண்டும். கேட்கப்பட்ட 200 வினாக்களில் ஒவ்வொரு கேள்விக்கும் ஒன்றரை மதிப்பெண் வீதம் 300 மதிப்பெண் கொடுக்கப்படும்.
TNPSC Group 1 Answer Key 2020 – 2021
இந்நிலையில் மொழியாக்கம் செய்யப்பட்ட வினாக்களில் 6 வினாக்கள் தவறான வினாவாக உள்ளதாக தேர்வர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 32, 33, 59, 64, 90, 163 ஆகிய 6 கேள்விகளில் வினாக்கள், விடை, மொழியாக்கம் ஆகியவை தவறாக உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். அதாவது 32வது கேள்வியில் திராவிட பண்டிதன் என்ற பத்திரிகையை ஆரம்பித்தவர் யார்? என்ற கேள்விக்கு, “திராவிட பாண்டியன் என்ற பத்திரிகையை ஆரம்பித்தவர் யார்?” எனக் கேள்வி கேட்டிருக்க வேண்டும். அதே போல தமிழகத்தில் 1927 ஆம் ஆண்டு, நீல் உருவ சிலை சத்தியகிரக போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்மணி (தியாகி) என்ற கேள்விக்கு கே.பி.சுந்தராம்பாள், பத்மாசானி அம்பாள், முத்துலட்சுமி ரெட்டி, செல்வி துர்க்காபாய் என்று விடை உள்ளது. இதற்கு சரியான விடை, ‘‘அஞ்சலை அம்மாள், அஞ்கச்சி அம்மாள்” ஆகும். அதே போல் இந்தியாவில் ரயில்வே மண்டலங்களின் எண்ணிக்கை? என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு வழங்கப்பட்ட விடைகள் அனைத்தும் தவறாக உள்ளது என்று கூறியுள்ளனர்.
ஜனவரி 18 முதல் பள்ளிகள் திறக்கப்படும் – பாகிஸ்தான் அரசு அறிவிப்பு!!
இவ்வாறு 6 கேள்விகள் தவறாக உள்ளது. இந்நிலையில் அந்த கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என டிஎன்பிஎஸ்சி-க்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளுக்கு விடை குறிப்பு இன்னும் 1 வாரத்தில் வெளியிடப்படும். அதன்பின் அதில் உள்ள பிழைகளை தகுந்த ஆதாரங்களுடன் ஆட்சேபனை தெரிவிக்க 7 நாட்கள் வழங்கப்படும். அதை டிஎன்பிஎஸ்சி தேர்வு குழு ஆராய்ந்து அதன்பின் தகுந்த மதிப்பெண் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்