TNPSC குரூப் 4 தேர்வின் மூலம் 10,292 காலிப்பணியிடங்கள் நிரப்ப திட்டம் – புதிய பட்டியல் வெளியீடு!
தமிழகத்தில் குரூப் 4 தேர்வின் மூலமாக இந்தாண்டு 10,167 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 10,292 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
TNPSC குரூப் 4:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணத்தினால் கடந்த இரண்டு ஆண்டுகளாக குரூப் 4 தேர்வு நடத்தப்படாத நிலையில் கடந்த ஆண்டு தேர்வு நடத்தப்பட்டு மார்ச் மாதத்தில் தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டது. இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் எந்தவித காலிப்பணியிடங்களும் நிரப்பப்படாத நிலையில் ஏகப்பட்ட ஊழியர்களும் பணி ஓய்வு பெற்றிருக்கின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் தற்போது வரை குரூப் 4 தேர்வின் மூலமாக 3 லட்சத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி வருகிறது.
TN MRB Laboratory வேலைவாய்ப்பு 2023 – 340 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க ஜூலை 2 கடைசி நாள்!
ஆனால், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் இந்த ஆண்டு10,117 காலிப்பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட இருப்பதாக தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இதன் பின்னர், TNPSC சார்பில் பணியிடங்கள் உயர்த்தப்படும் என அறிவித்து விட்டு வெறும் 60 பணியிடங்களை மட்டும் உயர்த்தி 10,167 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இந்த ஆண்டு கண்டிப்பாக 20,000 பணியிடங்களை அரசு நிரப்ப வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில், தற்போது மொத்தமாக 10,292 காலி பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, 5,321 இளநிலை உதவியாளர் பணியிடம், 3,377 தட்டச்சர் பணியிடம், 1,079 சுருக்கெழுத்தர் பணியிடம், 425 கிராம நிர்வாக அலுவலர், 69 பில் கலெக்டர், 20 கள உதவியாளர், ஒரு இருப்பு காப்பாளர் பணியிடம் என மொத்தமாக 10,292 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.