கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் மழை குறித்த அப்டேட் – வெளியான வானிலை அறிக்கை!
தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அத்துடன் சில இடங்களில் வறண்ட வானிலையே நிலவ கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை தகவல்:
தமிழகத்தில் தற்போது வெப்பநிலை இயல்பை விட அதிகரித்துள்ளது. அதாவது ஈரோடு, கரூர், மதுரை நாமக்கல் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கோடை வெயில் சதம் அடித்துள்ளது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் வரும் நாட்களில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரம் என்று கணித்துள்ளது.
சுட்டெரிக்கும் கோடை வெயில் – வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரும்.. வானிலை மையம் தகவல்!
இதற்கு மத்தியில் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 17ஆம் தேதி கிழக்கு திசை வேக மாறுபாடு காரணமாக ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல்.13 ,14, 15,16 ஆகிய தேதிகளில் தமிழக புதுவை காரைக்கால் பகுதியில் வறண்ட வானிலையே நிலவக்கூடும்.
Follow our Instagram for more Latest Updates
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் வெப்பநிலை அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் அளவிலும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download