தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கான ரேஷன் கடை தேர்வு முடிவுகள் – வெளியீடு!
தமிழக ரேஷன் கடைகளில் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் பதவிகளுக்கான நேர்காணல் முடிவுகள் மாவட்டம் வாரியாக வெளியாகி வருகிறது. தற்போது 4 மாவட்டங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ரேஷன் கடை தேர்வு முடிவுகள்:
கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலைக்கடைகளுக்கு விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு சமீபத்தில் வெளியானது. இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்பின் மூலம் மொத்தம் 6000 க்கு மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்கள் எழுத்துத் தேர்வும் இல்லாமல், கல்வித் தகுதி மற்றும் நேர்முகத் தேர்வில் (50:50 மதிப்பெண்கள்) பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
NPCIL நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் Executive Trainee வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
அதன் படி, கடலூர், பெரம்பலூர், விருதுநகர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் நடைபெற்ற ரேஷன் கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் பதவிகளுக்கான நேர்காணல் முடிவுகள் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியாகி உள்ளது. அதற்கான நேரடி இணைப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது.