1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க திட்டம் – முதல்வர் அறிவிப்பு!

0
1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க திட்டம் - முதல்வர் அறிவிப்பு!
1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க திட்டம் - முதல்வர் அறிவிப்பு!
1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க திட்டம் – முதல்வர் அறிவிப்பு!

தெலுங்கானா மாநிலத்தில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

காலை சிற்றுண்டி திட்டம்:

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி சார்ந்த பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைந்த காரணத்தினால் ஒவ்வொரு மாதமும் அடுத்தடுத்த பள்ளிகளில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், அனைத்து மாணவர்களுக்கும் சரியான ஊட்டச்சத்து கிடைக்க வேண்டும் என்கிற நோக்குடன் கிராமங்களில் விளையும் சத்தான காய்கறிகளைக் கொண்டு உணவு தயார் செய்யப்பட்டு வருகிறது.

வெறும் 600 ரூபாய்க்கு சிலிண்டர் விற்பனை.. யாரெல்லாம் வாங்கலாம் – வெளியான அப்டேட்!

இந்நிலையில், தமிழகத்தைப் போலவே தெலுங்கானா மாநிலத்திலும் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்க முதல்வர் சந்திரசேகர ராவ் திட்டமிட்டுள்ளார். இந்த திட்டத்திற்காக ரூ. 400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு மாணவர்களுக்கும் வழங்க வேண்டிய காலை உணவு பட்டியலையும் தெலுங்கானா பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தை தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் காலை சிற்றுண்டி திட்டம் அறிமுகம் செய்வது பாராட்டுக்குரியது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!