ரயில் பயணம் மேற்கொள்ளும் பெண்களின் கவனத்திற்கு… தமிழக ரயில்வே போலீஸ் வெளியிட்ட முக்கிய தகவல்..
தற்போதைய பரபரப்பான நகர்ப்புற வாழ்வில், ரயில் போக்குவரத்து என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. மேலும், நாளுக்கு நாள் ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும், மலிவான விலையில் விரைவான பயணம் செய்ய முடியும் என்பதால் பொதுமக்கள் பலரும் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். இந்நிலையில் பெண்களுக்கான ரயில் பாதுகாப்பு அறிவிப்பு பற்றி தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
பொதுமக்கள் கவனத்திற்கு.. தமிழ்நாடு முழுவதும் சிலிண்டர் விநியோகம் ரத்து.. காரணம் என்ன தெரியுமா..??
அதாவது, “தமிழகத்தில் ரயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இன்று (28-03-2025) 47 இடங்களில், ரயில்களில் வழக்கமாக பயணிக்கும் பெண் பயணிகள் கொண்ட வாட்ஸ் அப் குழுக்கள் தமிழக ரயில்வே போலீசாரால் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், பாதுகாப்பு குறைபாடுகள், அவசர உதவி, பயணத்தின் போது ஏற்படும் இன்னல்களை இதில் பதிவிடுவதன் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது”.


























