திருப்பதியில் வேலை மாதம் ரூ. 1 லட்சம் ஊதியம் – தேவஸ்தானம் எடுத்த அதிரடி நடவடிக்கை!
திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி சமூக வலைத்தளங்கள் வாயிலாக பலர் மக்களை ஏமாற்றி வருகின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேவஸ்தானம் புகார் அளித்துள்ளது.
வேலைவாய்ப்பு:
புகழ் பெற்ற திருப்பதி தேவஸ்தானத்தில் காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும் இப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் பல்வேறு விளம்பரங்கள் வந்த வண்ணம் உள்ளது. இப்பணிகளில் சேர விரும்புபவர்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடிகள் நடந்து வருகிறது. சமூக வலைத்தளங்கள் வாயிலாக மக்களை தொடர்பு கொண்டு திருப்பதியில் மாதம் 1 லட்சம் ஊதியத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டுகின்றனர்.
YouTubeல் ஜூன் 26 முதல் புதிய மாற்றம் – வெளியான ஷாக் அப்டேட்!
இதனை நம்பி பலரும் போலி இணையதளங்களில் விண்ணப்பிக்கின்றனர். இது குறித்து ஆய்வு செய்து தேவஸ்தான சைபர் கண்காணிப்பு அதிகாரிகள் திருமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதில் மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் இது போன்ற போலியான வேலைவாய்ப்பு விளம்பரங்களை கண்டு மக்கள் ஏமாற வேண்டாம் என்று தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.