உத்தரகாண்ட் மாநிலத்தில் 3 அரசு போட்டித்தேர்வுகள் ரத்து – 2023 மார்ச் மீண்டும் தேர்வு!!
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற போட்டித்தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது இத்தேர்வுகளை மீண்டும் நடத்த இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு ரத்து
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 2021ம் ஆண்டில் மே மாதத்தில் பட்டதாரி-நிலை ஆட்சேர்ப்புத் தேர்வும், இதே போல் அதே ஆண்டில் ஜூலை மாதத்தில் வனக் காவலர்களுக்கான ஆட்சேர்ப்புத் தேர்வும் மற்றும் செப்டம்பர் மாதத்தில் செயலகப் பாதுகாவலர்களுக்கான ஆட்சேர்ப்புக்குரிய தேர்வும் நடைபெற்றது. இந்த தேர்வுக்கான வினாத்தாள்கள் கசிந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
ஜன.01 முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியம் ரூ.1,500 ஆக உயர்வு – அரசாணை வெளியீடு!!
அத்துடன் ஏராளமான தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதும் தெரிய வந்துள்ளது. அதனால் இந்த தேர்வுகளை ரத்து செய்ய உள்ளதாக உத்தரகாண்ட் துணை சேவை தேர்வு ஆணையம் (UKSSSC) முடிவு செய்துள்ளது. மேலும் இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில், இந்த தேர்வுகளில் கலந்து கொண்டவர்களுக்கு மட்டும் மீண்டும் தேர்வு நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
Follow our Instagram for more Latest Updates
அதன்படி மேற்கண்ட 3 அரசு போட்டித்தேர்வுகளில் பல்வேறு துறைகளில் இருக்கும் 1,282 காலிப்பணியிடங்களுக்கு அடுத்த ஆண்டு (2023) மார்ச் மாதம் 2ம் வாரத்தில் புதிய தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.