ஜன.01 முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியம் ரூ.1,500 ஆக உயர்வு – அரசாணை வெளியீடு!!
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியம் மற்றும் இலங்கை அகதிகளுக்கான மாற்றுத்திறனாளிகளுக்கு மாத ஓய்வூதியமாக ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இதனை தற்போது உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஓய்வூதியம்
தமிழகத்தில் கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் முதல் சமூக நலன் மற்றும் சத்துணவு திட்ட துறையால் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.500 இருந்து ரூ.1000 ஆக வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக வெளியிட்ட அரசாணையில், வருவாய் துறை மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியத்தொகை உயர்த்தி வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் தலைதூக்கும் ரேஷன் அரசி கடத்தல் – அரசின் அதிரடி நடவடிக்கை!
அதன்படி வருகிற ஜனவரி 1ம் தேதி முதல் ரூ.1000த்தில் இருந்து ரூ.1,500 ஆக மாத ஓய்வூதியத்தொகை உயர்த்தி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஓய்வூதியத்தொகை உயர்வு இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதிய திட்டம், இலங்கை அகதிகளுக்கான மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியம் பெற்று வரும் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
Follow our Instagram for more Latest Updates
இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.263 கோடிக்கு மேல் செலவாகும் என கணக்கிடப்படுகிறது. மேலும் இதனை 2023 ஜனவரி மாதம் முதல் பயனாளிகளுக்கு வழங்க உள்ளதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இதற்கு ரூ.65,89, 72,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பிறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.