ரூ. 1000 உரிமைத் தொகை பெறுவதில் சிக்கல் – வலுக்கும் கோரிக்கை!!
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1000 உரிமைத் தொகை வழங்க மறுக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.
ரூ. 1000 உரிமைத் தொகை:
தமிழகத்தில் மகளிருக்கான ரூ. 1000 உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வரையிலும் மூன்று மாதத்திற்கான தொகை குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த மாதம் முன்கூட்டியே வருமா என்கிற எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. இதனிடையே, தமிழகத்தில் ரூ. 1000 உரிமைத் தொகை வழங்குவதற்கு அரசின் சார்பில் சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டிருந்தது. அதாவது, நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்களுக்கு உரிமைத் தொகை கிடையாது என அறிவிக்கப்பட்டது.
வழக்கத்தை விட விலை உயர்ந்த காய்கறிகள் – இன்றைய அப்டேட்!
இதனிடையே, மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் மூன்று சக்கர வாகனங்களை அதிகாரிகள் நான்கு சக்கர வாகனங்களாக பதிவு செய்ததனால் அவர்களுக்கு ரூ. 1000 உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் எந்தவித பலனும் கிடைக்கவில்லை. இதனால், இதனை மீண்டும் மறுபடியும் செய்து மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1000 உரிமைத் தொகை வாங்க தமிழக அரசின் சார்பில் ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.