முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை – மாநில அரசு தகவல்!!
தெலுங்கானாவில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகமாக இருந்த போதிலும் முழு ஊரடங்கு தேவையில்லை என அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்:
தெலுங்கானாவில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. பல மக்கள் நோய் தொற்றிற்கு ஆளாகியுள்ளனர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 75 ஆயிரமாக உள்ளது. இது குறித்து அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் கூறுகையில், ‘கொரோனா பரவல் அதிகமாக இருந்தாலும் முழு ஊரடங்கு தேவையில்லை. தற்போதுள்ள கட்டுப்பாடுகளே போதுமானது என தெரிவித்து இது குறித்து பிரதமர் மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
TN Job “FB Group” Join Now
அதில் மாநிலம் முழுவதும் ஆக்ஸிஜன், ரெம்டேசிவிர் மற்றும் தடுப்பூசி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் ஸ்ரீபெரம்புதூரிலிருந்தும், கர்நாடகாவின் பெல்லாரியிடமிருந்தும் ஆக்ஸிஜன் மாநிலத்திற்கு கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். ஹைதராபாத் ஒரு மருத்துவ மையமாக செயல்பட்டு வருவதால் ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களை சேர்ந்த பலர் இங்கு சிகிச்சைக்கு வருகின்றனர்.
தமிழகத்தில் மே 16 முதல் ஆவின் பால் விலை குறைப்பு – முதல்வர் அறிவிப்பு!!
இது ஹைதராபாத்தில் உள்ள மருத்துவ உள்கட்டமைப்புக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆக்சிஜன், தடுப்பூசிகள் மற்றும் ரெம்ட்சிவிர் ஊசி கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள 440 மெட்ரிக் டன்களுக்கு எதிராக ஆக்ஸிஜன் வழங்கலை 500 மெட்ரிக் டன்களுக்கு அதிகரிக்கவும் அதே நேரத்தில் ரெம்டெசிவிர் ஊசி மருந்துகள் ஒரு நாளைக்கு 25,000 ஆக அதிகரிக்கப்பட வேண்டும். தெலுங்கானாவுக்கு 2 லட்சம் முதல் 2.5 லட்சம் தடுப்பூசிகள் தேவைப்படுவதையும் சுட்டிக்காட்டிய அவர், தேவையான எண்களை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யுமாறு பிரதமர் மோடியை வலியுறுத்தினார்.
சென்னையில் கொரோனா பரவல் குறித்த விவரங்கள் – 3 லட்சம் பேர் பாதிப்பு!!
இது குறித்து பிரதமரின் அறிவுறுத்தல்களை பின்பற்றி பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், மாநிலம் முழுவதும் ஆக்ஸிஜன், மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார். தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவுக்கு பதிலாக வட மாநிலங்களிலிருந்து ஆக்ஸிஜன் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார். மேலும் அதன் பின்னர் ஆலோசனை கூட்டம் நடத்திய முதல்வர் மக்களுக்கு கொரோனா முழு ஊரடங்கு அறிவிக்கப்பட வாய்ப்பில்லை. முழு ஊரடங்கு காரணமாக பல பொருளாதார பாதிப்பு ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.